என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஹிலாரிக்கு 75 முன்னாள் தூதர்கள் ஆதரவு
Byமாலை மலர்24 Sep 2016 2:33 AM GMT (Updated: 24 Sep 2016 2:33 AM GMT)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரிக்கு முன்னாள் தூதர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் 75 பேர் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் 8-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இருவரும் நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஹிலாரிக்கு முன்னாள் தூதர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் 75 பேர் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கு முற்றிலும் தகுதி இல்லாத நபர். ரஷியா, சீனா தொடங்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள்வரையில் அமெரிக்கா சந்தித்து வருகிற சிக்கலான பிரச்சினைகள் பற்றி அவர் ஏதும் அறியாதவர். அவர் எதையும் கற்றுத் தெரிந்து கொள்வதற்கும் ஆர்வம் காட்டவில்லை” என சாடினர்.
மேலும், “வெளியுறவுத்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை டிரம்ப் புரிந்துகொள்ளவில்லை. மாறாக அவமதிக்கிறார்” என குற்றம் சாட்டி உள்ளனர்.
ஹிலாரியை பற்றி அவர்கள் குறிப்பிடும்போது, “வெளியுறவுத்துறை மந்திரி பதவி வகித்த அனுபவத்தால், அமெரிக்கா நலன்களை அறிந்திருக்கிறார். கள நிலவரங்களை உணர்ந்திருக்கிறார். தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த பல்லாயிரக்கணக்கான அதிகாரிகளைப்பற்றி தெரிந்திருக்கிறார்” என கூறி உள்ளனர்.
இந்த அறிக்கையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய தாமஸ் பிக்கரிங், நான்சி பவல் உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் 8-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இருவரும் நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஹிலாரிக்கு முன்னாள் தூதர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் 75 பேர் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கு முற்றிலும் தகுதி இல்லாத நபர். ரஷியா, சீனா தொடங்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள்வரையில் அமெரிக்கா சந்தித்து வருகிற சிக்கலான பிரச்சினைகள் பற்றி அவர் ஏதும் அறியாதவர். அவர் எதையும் கற்றுத் தெரிந்து கொள்வதற்கும் ஆர்வம் காட்டவில்லை” என சாடினர்.
மேலும், “வெளியுறவுத்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை டிரம்ப் புரிந்துகொள்ளவில்லை. மாறாக அவமதிக்கிறார்” என குற்றம் சாட்டி உள்ளனர்.
ஹிலாரியை பற்றி அவர்கள் குறிப்பிடும்போது, “வெளியுறவுத்துறை மந்திரி பதவி வகித்த அனுபவத்தால், அமெரிக்கா நலன்களை அறிந்திருக்கிறார். கள நிலவரங்களை உணர்ந்திருக்கிறார். தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த பல்லாயிரக்கணக்கான அதிகாரிகளைப்பற்றி தெரிந்திருக்கிறார்” என கூறி உள்ளனர்.
இந்த அறிக்கையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய தாமஸ் பிக்கரிங், நான்சி பவல் உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X