search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காள தேசம் படகு விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
    X

    வங்காள தேசம் படகு விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

    வங்காளதேசத்தில் படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
    டாக்கா:

    வங்காளதேசத்தின் தென்பகுதியில் உள்ள பரிசால் மாவட்டம், பனாரிபாரா பகுதியை சேர்ந்த 80 பேர் படகொன்றில் நேற்று சந்தியா ஆற்றை கடந்த போது படகு திடீரென ஆற்றின் நடுவே நிலைதடுமாறி தண்ணீர்  கவிழ்ந்தது.

    விபத்தில் சிக்கிய சிலர் சிரமப்பட்டு, நீந்தி கரையை வந்தடைந்துள்ள நிலையில், 30க்கும்  அதிகமானவர்கள் காணாமல் போனதாக கூறப்பட்டது. நேற்று 14 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 பேர் உடல்களை மீட்டுள்ளனர். இதனால் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது.

    படகு விபத்தில் காணாமல் போனவர்களில் இன்னும் 25 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×