search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் கை மணிக்கட்டு அறுபட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் கை மணிக்கட்டு அறுபட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி

    காதலியை கொன்ற வழக்கில் தென்னாப்பிரிக்காவில் உள்ள சிறையில் ஆறாண்டு தண்டனை அனுபவித்துவரும் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் இன்று கை மணிக்கட்டுகல் அறுபட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பிரிட்டோரியா:

    தென் ஆப்ரிக்காவை சேர்ந்த தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ், இரு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட இவர், ஒலிம்பிக்கில் சாதாரண வீரர்களுடன் சேர்ந்து பங்கேற்ற முதல் மாற்றுத்திறனாளி வீரர் என்ற பெருமை பெற்றவர்.இவர் தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோகனஸ்பர்க்கில் வசிக்கிறார்.

    இவர் பிரபல மாடல் அழகி ரீவா ஸ்டீன்கேம்ப் என்பவரை காதலித்து வந்தார். 2013-ம் ஆண்டு காதலர் தினத்தன்று பிஸ்டோரியஸ் தனது வீட்டில் வைத்து காதலி ஸ்டீன்கம்ப்பை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். வீட்டில் புகுந்தது  திருடன் என்று தவறுதலாக நினைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டேன் என்று பிஸ்டோரிஸ் தெரிவித்தார்.

    இந்த வழக்கில் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருடமாக சிறையில் இருந்த அவர் பரோலில் வெளியே வந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரி தென் ஆப்பிரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது திட்டமிட்ட கொலை என்று கூறியதுடன், இதுபற்றி விசாரித்து பிஸ்டோரியசுக்கு தண்டனையை உயர்த்தி வழங்கும்படி கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து கீழ்கோர்ட்டில் பிஸ்டோரியசுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான வாதத்தில் பிஸ்டோரியசுக்கு 5 ஆண்டுக்கு பதில் 15 ஆண்டுகள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு முறையிட்டது.

    இதையடுத்து, பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.  தண்டனை அறிவிக்கப்பட்டதும் பிஸ்டோரியஸ் உடனடியாக பிரிட்டோரியா நகரில் உள்ள கோசி மாம்புரு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, அங்கு தனது தண்டனை காலத்தை கழித்துவரும் அவர் இன்று இரு கைகளின் மணிக்கட்டுகளும் அறுபட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்ததாக ஆப்பிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அவர் கை மணிக்கட்டுகளை அறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கக்கூடும் என்னும் யூகச் செய்திகளை மறுத்துள்ள ஆஸ்கர் பிஸ்டோரியஸ், சிறை தூங்கி கொண்டிருந்தபோது கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்ததால் கை மணிக்கட்டுகளில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×