என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க செனட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாடு மசோதாக்கள் நிராகரிப்பு
Byமாலை மலர்22 Jun 2016 3:12 AM GMT (Updated: 22 Jun 2016 3:12 AM GMT)
துப்பாக்கி கலாசாரத்தை ஒடுக்குகிற விதத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்யும் மசோதாக்கள் அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் நிராகரிப்பு
வாஷிங்டன்:
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வருவதால், கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமா, பாராளுமன்றத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் புளோரிடா மாகாணத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், துப்பாக்கி கலாசாரத்தை ஒடுக்குகிற விதத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்யும் மசோதாக்கள் அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் கொண்டு வரப்பட்டன.
பயங்கரவாத சந்தேக பட்டியலில் இடம் பெற்றிருக்கிறவர்களுக்கு துப்பாக்கிகள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்தும் மசோதாவும் இதில் அடக்கம்.
ஆனால் குடியரசு கட்சியினர் கொண்டு வந்த மசோதாக்களை ஜனநாயக கட்சியினரும், ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்த மசோதாக்களை குடியரசு கட்சியினரும் நிராகரித்தனர். ஆயுதங்கள் வைத்துக்கொள்வதற்கு அரசியல் சட்டம் தந்துள்ள உரிமைகளை மீறி விட்டதாக ஜனநாயக கட்சியினர் மீது குடியரசு கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இதேபோன்று குடியரசு கட்சியினர் கொண்டு வந்துள்ள மசோதாக்கள் பலவீனமானவை என ஜனநாயக கட்சியினர் குறைகூறினர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வருவதால், கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமா, பாராளுமன்றத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் புளோரிடா மாகாணத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், துப்பாக்கி கலாசாரத்தை ஒடுக்குகிற விதத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்யும் மசோதாக்கள் அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் கொண்டு வரப்பட்டன.
பயங்கரவாத சந்தேக பட்டியலில் இடம் பெற்றிருக்கிறவர்களுக்கு துப்பாக்கிகள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்தும் மசோதாவும் இதில் அடக்கம்.
ஆனால் குடியரசு கட்சியினர் கொண்டு வந்த மசோதாக்களை ஜனநாயக கட்சியினரும், ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்த மசோதாக்களை குடியரசு கட்சியினரும் நிராகரித்தனர். ஆயுதங்கள் வைத்துக்கொள்வதற்கு அரசியல் சட்டம் தந்துள்ள உரிமைகளை மீறி விட்டதாக ஜனநாயக கட்சியினர் மீது குடியரசு கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இதேபோன்று குடியரசு கட்சியினர் கொண்டு வந்துள்ள மசோதாக்கள் பலவீனமானவை என ஜனநாயக கட்சியினர் குறைகூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X