search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    • குழந்தைக்கு எதைப்பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என ஆர்ட்டிசம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • குழந்தை எந்த நேரத்தில் எதை சாப்பிடுகிறது என்ற பயத்தில் இருக்க வேண்டியது உள்ளது.

    இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பிளாக்வுட் நகரை சேர்ந்தவர் ஸ்டேஷி ஹெர்ன் என்ற பெண்ணுக்கு 3 வயதில் வின்டர் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை வீட்டில் விளையாடும் போது தரையில் கிடந்த பொருட்களை எல்லாம் வாயில் போடுவதும், அதை சாப்பிடுவதுமாக இருந்துள்ளது. குழந்தைகளுக்கு இதுபோன்ற பழக்கம் வழக்கமானது என்பதால் நாளடைவில் இது சரியாகி விடும் என அவரது தாயார் கருதினார்.

    ஆனால் வழக்கத்திற்கு மாறாக சோபாவில் உள்ள பஞ்சு, போட்டோ பிரேம், கண்ணாடி துண்டுகள், கட்டிலில் உள்ள மரக்கட்டைகள் என அனைத்து பொருட்களையும் குழந்தை சாப்பிட தொடங்கியதால் ஸ்டேஷி அதிர்ச்சியடைந்தார். இதனால் குழந்தை தூங்கும் நேரத்தை தவிர சில நேரங்களில் அந்த குழந்தையையே கண்காணிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அந்த குழந்தைக்கு எதைப்பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என ஆர்ட்டிசம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய ஸ்டேஷி, குழந்தையின் உணவு பழக்கத்தால் குழந்தையை கண்காணிப்பதே முழு நேர வேலையாக மாறி விட்டது. குழந்தை எந்த நேரத்தில் எதை சாப்பிடுகிறது என்ற பயத்தில் இருக்க வேண்டியது உள்ளது. நள்ளிரவில் எழுந்து போர்வை, மெத்தையையும் சாப்பிடுகிறது. இதில் இருந்து குழந்தையை மீட்க போராடி வருகிறேன். இதற்கு மருத்துவர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

    • வடக்கு காசாவை தொடர்ந்து முக்கியமான நகரமாக கருதப்படும் ரஃபா மீது தாக்குதல் நடத்த திட்டம்.
    • காசாவின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் ரஃபா பகுதியில் உள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டுவதற்காக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்கு பகுதியை துவம்சம் செய்து விட்டது. இங்கிருந்து பெரும்பாலான மக்கள் தெற்குப் பகுதியான ரஃபா, கான் யூனிஸ்க்கு இடம் மாறினர். கான் யூனிஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இலக்கை எட்ட வேண்டுமென்றால் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும். அதற்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எகிப்து-காசா எல்லை மூடப்படும் அபாயம் ஏற்படும். மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க முடியாத நிலை ஏற்படும்.

    இதனால் ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இதற்கிடையே அங்குள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார். அப்போது ரஃபா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், தாக்குதலுக்குப் பதிலாக வேறு வழிகள் இருந்தால் அதை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதற்கு நேதன்யாகு வேறு வழிகள் இருந்தால் கடைபிடிக்க முயற்சி செய்கிறோம் என உறுதி அளித்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் சுமார் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள்.

    காசா முனையில் மொத்தம் 2.3 மல்லியன் பாலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் தற்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போர் காரணமாக ரஃபா பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இவர்களை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிப்போம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    • பொது வெளியில் வராமல் இருந்தது வதந்திகளுக்கு வழி வகுத்தது.
    • முதல் முறையாக கேட் மிடில்டன் பொது வெளியில் வந்துள்ளார்.

    வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார். எனினும், சிகிச்சைக்கு பிறகு கேட் மிடில்டன் பொது வெளியில் வராமல் இருந்தது பல்வேறு வதந்திகளுக்கு வழி வகுத்தது.

    இந்த நிலையில், இளவரசர் வில்லியம் உடன் கேட் மிடில்டன் பண்ணை கடை ஒன்றிற்கு சென்றிருக்கிறார். கடைக்கு சென்று திரும்பிய கேட் மிடில்டன் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் காணப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு முதல் முறையாக கேட் மிடில்டன் பொது வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    விண்ட்சர் அருகில் உள்ள அடிலைடு காட்டேஜ் அருகில் உள்ள பண்ணை கடைக்கு கேட் மிடில்டன் மற்றும் வில்லியம் ஜோடி வந்துள்ளனர். முன்னதாக அவர்களது குழந்தைகள் கலந்து கொண்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    • அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி 11 நாட்கள் நடைபெற்றது.
    • இந்த ராணுவ பயிற்சியை தங்களது நாட்டிற்கு எதிரான போர் ஒத்திகை என வடகொரியா பார்க்கிறது.

    தென்கொரியா- அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதை தங்களது நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது.

    இதனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.

    இன்று காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்திய நிலையில், 37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

    ஜப்பானை ஒட்டியுள்ள கடற்கரையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருவது அந்த நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனையின்போது ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்திற்கும், ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் விழுகின்றன. இது அனைத்தும் ஜப்பான் பொருளாதார மண்டத்திற்கு வெளியில்தான் நடக்கிறது. இதனால் ஜப்பானுக்கு காயமோ, சேதமோ இல்லை என பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருந்தார்.

    ஆனால், வடகொரியாவின் தொடர் சோதனை நாட்டின அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிரட்டல் என அவர் கூறவில்லை. அதேவேளையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இன்று காலை ஏராளமான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்ததை கண்டறிந்துள்ளோம் என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு மிரட்டல் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உதவியுடன் எந்தவொரு ஆத்திரமூட்டும் செயலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் சென்று 300 முதல் 350 கி.மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    11 நாட்கள் கொண்ட அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியாவை அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெருமையை பெறுகிறார்.
    • சோவியத் ரஷியா உடைந்த பிறகு அதிக வாக்குகள் பெற்ற அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    ரஷியாவில் அதிபருக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.

    இதன்மூலம் ரஷியா வரலாற்றில் அதிக வருடம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன்னதாக ஜோசப் ஸ்டாலின் ரஷியாவை அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

    மேலும், சோவியத் ரஷியா உடைந்த பிறகு அதிக வாக்குகள் பெற்ற அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    உக்ரைனுக்கு எதிராக இரண்டு வருடங்கள் சண்டை நடைபெற்று வருவது, எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்தது உள்ளிட்ட சம்பவங்கள் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டிய புதின் வெற்றி பெற்றுள்ளார்.

    ரஷியாவில் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறவில்லை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

    தேர்தல் நடைபெற்றபோது உக்ரைன் ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என புதின் தெரிவித்துள்ளார்.

    எதிர்க்கட்சி தலைவர்களை போட்டியிடாமல் தடுத்தல், அடக்குமுறை என புதின் மேல் குற்றச்சாட்டு எழுந்த நிலையிலும் ரஷியா மக்கள் திரளாக திரண்டு அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
    • மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்.

    பொருளாதார அழுத்தம் மற்றும் மோதல்கள் மற்றும் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஆகியவை ஐரோப்பியக் கரைகளுக்கு அதிக குடியேற்றங்களைத் தள்ளக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில் பணப் பற்றாக்குறை உள்ள எகிப்துக்கு 8 பில்லியன் டாலர் உதவிப் பொதியை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

    ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெனெ் மற்றும் பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரியா, சைப்ரஸ் மற்றும் கிரீஸ் தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கெய்ரோவில் உள்ள ஐரோப்பிய யூனியன் மிஷன் படி, "அரபு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கான அடுத்த மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பி.டி.ஐ. மற்றும் அரசு சாராத சில நிறுவனங்கள் தெரிவித்தன.
    • அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் தேசத்துரோகத்திற்கு சமம்.

    பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கு விசாரணைக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், மக்கள் ஆணையை திருடிய அதிகாரிகள் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், "முதலில் எங்களது கட்சி சின்னத்தை சதி செய்து முடக்கினர். தேர்தலுக்கு பிறகு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் பங்கு பறிக்கப்பட்டன. மக்களின் ஆணை திருடப்பட்டு இருப்பது அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் தேசத்துரோகத்திற்கு சமமானது."

    "நடைபெற்று முடிந்த தேர்தலில் எனது கட்சியினர் மட்டும் மூன்று கோடி வாக்குகளை பெற்றனர். இதே வாக்குகளை தேர்தலை சந்தித்த மற்ற 17 கட்சிகளும் கூட்டாக பெற்றன. தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை பி.டி.ஐ. மற்றும் அரசு சாராத சில நிறுவனங்கள் தெரிவித்தன."

    "தேசிய சபை மற்றும் மாகாண சபைகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து பெஷாவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். பி.டி.ஐ. கட்சி இடங்களை தேர்தல் ஆணையம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்க முடியாது," என்று தெரிவித்தார்.

    • குழந்தையின் பின்புறம் வால் இருக்கும் வீடியோவை மருத்துவர் லி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்
    • குழந்தையின் பின்புறம் இருக்கும் வாலை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தனர்

    சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு 10 செ.மீ அளவில் வால் இருந்ததால் மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

    Tethered Spinal Cord என சொல்லப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் எனவும், இதில் எவ்வித அசைவும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    குழந்தையின் பின்புறம் வால் இருக்கும் வீடியோவை மருத்துவர் லி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

    குழந்தையின் பின்புறம் இருக்கும் வாலை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்து உள்ளதால், அறுவை சிகிக்சை செய்து வாலை அகற்றினால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும், எனவே வாலை நீக்க முடியாது என மருத்துவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    இதற்கு முன்னதாக, கயானா நாட்டில், கடந்த வருடம் ஜூன் மாதம் பிறந்த ஒரு குழந்தைக்கு வால் இருந்துள்ளது. பிறந்து 10 நாட்களே ஆன அந்த குழந்தையின் வாலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
    • ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    இதற்கிடையே, அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நவம்பர் 5-ம் தேதியை (அதிபர் தேர்தல்) நினைவில் வைத்து கொள்ளுங்கள். அது நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தக்களறி ஏற்படும் என தெரிவித்தார்.

    மெக்சிகோவில் கார்களை தயாரித்து அமெரிக்கர்களுக்கு விற்கும் சீனத் திட்டத்தை விமர்சித்தபோது அவர் இவ்வாறு கூறினார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தக் கார்களை அவர்களால் விற்க முடியாது. நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அது ஒட்டுமொத்த ரத்தக்களறியாக இருக்கும் என்றார்.

    இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறுகையில், அவர் மற்றொரு ஜனவரி 6-ம் தேதியை விரும்புகிறார். அமெரிக்க மக்கள் இந்த நவம்பரில் அவருக்கு மற்றொரு தேர்தல் தோல்வியைக் கொடுக்கப் போகிறார்கள். ஏனெனில் மக்கள் அவரது பயங்கரவாதம், வன்முறை மீதான அவரது பாசம் மற்றும் பழிவாங்கும் தாகம் ஆகியவற்றை நிராகரித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

    • வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மேலும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றார்.
    • தகவலறிந்ததும் போலீசார், தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க நடவடிக்கையில் இறங்கினர்.

    அமெரிக்காவின் வடக்கு பிலடெல்பியா புறநகர் பகுதியான லெவிட்டவுனில் உள்ள ஒரு வீட்டுக்கு முன் துப்பாக்கியுடன் புகுந்த வாலிபர், அங்கிருந்த 55 வயது பெண் மற்றும் 13 வயது சிறுமி ஆகிய 2 பேரை சுட்டுக்கொன்றார்.பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மேலும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றார்.

    இது குறித்து தகவலறிந்ததும் போலீசார், தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க நடவடிக்கையில் இறங்கினர். இதில் நியூ ஜெர்சி நகரில் பதுங்கியிருந்த அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆண்ட்ரே கார்டன் (வயது 26) என்பதும் அவர் தனது வளர்ப்புத்தாய் மற்றும் சகோதரியை சுட்டுக் கொன்றதும் தெரிய வந்தது.

    டிராண்டன் பகுதியில் கார் ஒன்றை திருடிய ஆண்ட்ரே கார்டன், அதில் லெவிட்டவுன் பகுதிக்கு சென்று தனது உறவினர்களை சுட்டுக் கொன்றுள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • சிறப்பு ஆராய்ச்சி கப்பல் என்ற பெயரில் அந்த கப்பலை உருவாக்க பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவில் உதவியுள்ளது.
    • சீனா தனது உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்தியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடற்படையில் முதல் உளவு கப்பல் சேர்க்கப்படுகிறது. இதற்காக பாகிஸ்தானுக்கு சீனா உதவிகளை வழங்கியுள்ளது.

    பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீ நீளமுள்ள இந்த கப்பல், ஏவுகணைகள் ஏவுவதை கண்காணிப்பது, உளவுத் துறையின் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ளும் திறனை கொண்டதாகும்.

    சிறப்பு ஆராய்ச்சி கப்பல் என்ற பெயரில் அந்த கப்பலை உருவாக்க பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவில் உதவியுள்ளது.


    நவீன வசதிகள் கொண்ட இதுபோன்ற, கப்பல்களை அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய ஒரு சில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. தற்போது பாகிஸ்தானுக்கு அந்த கப்பலை சீனா வழங்கி உள்ளது.

    ஏற்கனவே சீனா தனது உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்தியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சமீபத்தில் மாலத்தீவுக்கு சீனாவின் உளவுக்கப்பல் வந்து சென்றுள்ளது. மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல் சுற்றி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு கப்பலை வழங்கி சீனா உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியா, உக்ரைன் நாடுகள் இடையிலான போர் மூன்றாவது ஆண்டாக நடந்து வருகிறது.
    • பேரழிவை சந்தித்தாலும் உக்ரைன் பதில் தாக்குதலால் ரஷியாவுக்கு அழிவை கொடுத்து வருகிறது.

    மாஸ்கோ:

    ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும் பதில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு ரஷியாவுக்கு அழிவுகளைக் கொடுத்து வருகிறது.

    இதற்கிடையே, உக்ரைன் ராணுவம் கடந்த சில மாதங்களாக ரஷியாவின் போர்க்கப்பல்களை டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது.

    போர் தொடங்கியதில் இருந்து 3 போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்திருந்தது.

    இந்நிலையில், உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலியாகினர் என்றும், பெல்கோரோடில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பெல்கோரோட் கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் ராணுவம் ரஷியாவின் பெல்கோரோடில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் தொடர்ந்து நடப்பதால் வணிக வளாகங்கள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும். பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    ×