search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் கட்சிகள்
    X

    பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் கட்சிகள்

    தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. #BusFareHike
    சென்னை:

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. ஒவ்வொரு கட்சியும், போராட்டம் நடத்தும் தேதி விபரம் வருமாறு:-

    27-ந்தேதி (சனிக்கிழமை) தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது.

    இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கலந்து கொள்கின்றன.

    24-ந்தேதி (புதன்கிழமை) பா.ஜனதா சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    25-ந் தேதி (வியாழக் கிழமை) பா.ம.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் முழக்க போராட்டம் நடைபெறுகிறது.

    29-ந்தேதி (திங்கட்கிழமை) த.மா.கா. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    22-ந்தேதி (திங்கட்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தாலுகா அளவில் தர்ணா, மறியல் போராட்டம் நடக்கிறது.

    25-ந்தேதி (வியாழக்கிழமை) இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    23-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. #Tamilnews
    Next Story
    ×