search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியரசு தின விழா: விமான நிலையத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
    X

    குடியரசு தின விழா: விமான நிலையத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

    குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
    ஆலந்தூர்:

    வருகிற 26-ந்தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது.

    இதையடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி மத்திய உளவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். உடமைகளும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இன்று முதல் 30-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். மேலும் மோப்ப நாய் மூலம் விமான நிலையம் முழுவதும் சோதனை செய்யப்படுகிறது. #TamilNews
    Next Story
    ×