search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் கோவிலில் சிறுமியிடம் நகை கொள்ளை: வாலிபர் கைது
    X

    திருவள்ளூர் கோவிலில் சிறுமியிடம் நகை கொள்ளை: வாலிபர் கைது

    திருவள்ளூர் கோவிலில் சிறுமியிடம் நகை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ராஜாஜி சாலையைச் சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் மகள் நட்சத்திராவுடன் திருவள்ளூரில் உள்ள வீரராகவர் பெருமாள் கோவிலுக்கு வந்தனர்.

    கோவிலின் நாலு கால் மண்டபம் அருகே குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றபோது பின்னால் வந்த மர்ம வாலிபர் கூட்ட நெரிசலில் குழந்தை நட்சத்திரா அணிந்திருந்த 2 பவுன் தங்க வளையலை திருட முயன்றான்.

    இதனை பார்த்தவுடன் அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து திருவள்ளூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கிளாம்பாக்கத்தை சேர்ந்த வேணுகோபால் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×