search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை
    X

    திண்டுக்கல்லில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை

    திண்டுக்கல்லில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மகன் விக்னேஷ். (வயது 21). திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானா பகுதியில் தள்ளுவண்டியில் கோழி, மீன் பொறித்து விற்பனை செய்து வந்தார். அவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்கள் கடந்த 2 மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    நேற்று மாலை விக்னேஷ், அவரது நண்பர் ஷேக் ஆகியோர் தள்ளுவண்டியில் மீன்களை பொறித்து கொண்டிருந்தனர். அப்போது கடையின் பின்புறம் இருந்து 4 பேர் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் விக்னேசை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷேக் அவர்களை தடுக்க முயன்றார்.

    ஆனாலும் அந்த கும்பல் விக்னேசை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதில் ரத்தவெள்ளத்தில் விக்னேஷ் கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

    கொலை நடந்த இடம் முக்கியமான பகுதியாகும். எனவே அங்குநின்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட  விக்னேஷ் காதல் திருமணம் செய்தது வேறு சமூகத்தை சேர்ந்த பெண். எனவே இந்த முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×