என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவகொழுந்து மகன் பலி: விஜயகாந்த் இரங்கல்
பண்ருட்டி:
கடலூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிவக்கொழுந்து முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் பண்ருட்டி ஜவகர் தெருவில் வசித்து வருகிறார்.
இவரது மகன்ஜெசி என்கிற சசிந்தர் (வயது 24). இவர் முந்திரி வியாபாரம் செய்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர் மணிகண்டனுடன் மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியிலிருந்து ஆத்திரிகுப்பத்தில் உள்ள முந்திரி தொழிற்சாலைக்கு சென்றார்.
காடாம்புலியூர் அருகே உள்ளகாட்டாண்டிக்குப்பம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது இவரது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் சசிந்தர், மணிகண்டன் எதிரே மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த லட்சுமணன் (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வரும் வழியில் சசிந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன், லட்சுமணன் மேல் சிகிச்சைகாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவகொழுந்து மற்றும் தே.மு.தி.க. தொண்டர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். மகனின் உடலை பார்த்து சிவ கொழுந்து கதறி அழுதார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தொலைபேசியில் சிவ கொழுந்துக்கு ஆறுதல் கூறினார்கள்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் மகனை இழந்து தவிக்கும் சிவ கொழுந்து குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
பிரேத பரிசோதனை முடிந்தும் சசிந்தர் உடல் பண்ருட்டி ஜவஹர் தெருவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பிரேமலதா விஜயகாந்த், மற்றும் தொழில் அதிபர்ககள் ஜெயப்பிரியா ஜெயசங்கர், எஸ்.வி.ஜூவல்லர்ஸ் அதிபர் வைரக்கண்ணு, அருள், மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள், குடும்பத்தினர், வர்த்தக சங்க பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். #tamilnews #vijayakanth
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்