என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுக்கோட்டை அருகே கோவில் வளாகத்தில் 2 பேர் படுகொலை
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தண்டலை கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எப்போதாவது மட்டுமே பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். மீதி நேரம் பூட்டியே கிடக்கும்.
இந்நிலையில் நேற்று அந்த கோவில் வழியாக விவசாயிகள் சிலர் சென்றனர். அப்போது கோவில் வளாகத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வந்தது. இதையடுத்து கோவிலுக்கு சென்று பார்த்த போது 60 வயது மதிக்கத்தக்க 2 பேர் இறந்து கிடந்தனர். அதிர்ச்சியடைந்த விவசாயிகள் இது குறித்து உடனடியாக மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கோட்டைப்பட்டினம் போலீஸ் டி.எஸ்.பி. காமராஜ், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தவர்களில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் குளக்குடியை சேர்ந்த செல்லக்கண்ணு (வயது 60) என்பதும் மற்றொருவர் புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைகாடு பகுதியை சேர்ந்த அடைக்கலம் (60) என்பதும் தெரியவந்தது. அவர்களது உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. மேலும் உடல் பாதி அழுகிய நிலையில் இருந்தது.
இதனால் அவர்கள் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. உடல் அருகே உருட்டு கட்டைகள் மற்றும் கற்கள் கிடந்தது. இதனால் மர்மநபர்கள் அவர்களை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லக்கண்ணு, அடைக்கலம் இருவரும் மூங்கில் கூடை முடைந்து விற்பனை செய்து வந்த தோடு, கன்னிவலை விரித்து வைத்து உடும்பு, முயல்கள் ஆகியவற்றை பிடித்து வந்துள்ளனர். இந்த பிரச்சினையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் இறந்தனரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அய்யனார் கோவில் அருகே ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தற்போது 2 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்