search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்களின் சொத்துக்களை பராமரிக்க அரசு புதிய சட்டம் கொண்டு வரவேண்டும்: எச். ராஜா
    X

    கோவில்களின் சொத்துக்களை பராமரிக்க அரசு புதிய சட்டம் கொண்டு வரவேண்டும்: எச். ராஜா

    கோவில்கள் மற்றும் கோவில்களின் சொத்துக்களை பாதுகாக்க புதிய சட்டத்தை அரசு கொண்டு வரவேண்டும் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா பேசியுள்ளார்.
    நெல்லை:

    தமிழ்நாடு இந்து ஆலய பாதுகாப்புக்குழுவின் பொன்விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சி நெல்லையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று பேசியதாவது:-

    இந்து அறநிலையத்துறை தமிழ்நாட்டில் முறையாக செயல்படவில்லை. அத்துறையில் முறைகேடுகள் அதிகரித்து விட்டன. தமிழகத்தில் வசிக்கும் பெரும்பான்மை இந்து சமூகத்தினர் தங்களது கோவில்களை பாதுகாக்க வேண்டியுள்ளது. கோவில்கள், கோவில்களின் சொத்துக்களை பாதுகாக்க அரசு புதிய சட்டம் கொண்டு வரவேண்டும்.

    மொத்தமுள்ள 38,685 கோவில்களுக்கும் பாதுகாப்புக்குழு அமைத்து அக்கோவில்களின் சொத்து விவரங்களை அறிய வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு எச்.ராஜா பேசினார். 
    Next Story
    ×