என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: சேலத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க. - கூட்டணி கட்சியினர் மீது வழக்கு
சேலம்:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்கனவே கோவை, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.
அப்போது பொது மக்களிடம் குறைகள் கேட்டதுடன் கிராமங்களுக்கும் நேரடியாக சென்று தூய்மை பணிகள் குறித்தும் விளக்கினார். சேலம் மாநகர வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொருளாளர் சுபாஷ் தலைமையில் தி.மு.க.வினர், விடுதலை சிறுத்தை மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் கையில் கருப்பு கொடியுடன் அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
இதையடுத்து சேலம் டவுன் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. பொருளாளர் சுபாஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மீதும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் அனுமதியில்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுதல் (341), சட்ட விரோதமாக தடுத்தல் (143), தடையை மீறி சட்ட விரோதமாக கூடி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுதல் (188) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்