search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் இன்று அதிகாலை பிரபல ரவுடி வெட்டிக்கொலை - மர்மநபர்கள் வெறிச்செயல்
    X

    புதுக்கோட்டையில் இன்று அதிகாலை பிரபல ரவுடி வெட்டிக்கொலை - மர்மநபர்கள் வெறிச்செயல்

    புதுக்கோட்டையில் இன்று அதிகாலை ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). ஆட்டோ டிரைவரான இவர் புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் விஜயகுமார் மீது புதுக்கோட்டை போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது

    இந்நிலையில் இரவு 1 மணிக்கு அவர் சவாரியை முடித்து விட்டு வீட்டிற்கு ஆட்டோவை ஓட்டி சென்றார். வீட்டின் அருகே செல்லும் போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென விஜயகுமாரை வழிமறித்து சரமாரி அரிவாளால் வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் எழுந்து வந்து பார்த்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதனிடையே அரிவாள் வெட்டில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த விஜயகுமார் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக் கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விஜயகுமாரை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. முன்விரோதத்தில் எதி ராளிகள் யாராவது அவரை கொலை செய்தனரா? அல்லது ஆட்டோ ஸ்டாண்டில் ஏற்பட்ட ஏதாவது பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×