search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்மண் குவாரி வழக்கு: பொன்முடி மீதான விசாரணை அடுத்த மாதம் 8-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    செம்மண் குவாரி வழக்கு: பொன்முடி மீதான விசாரணை அடுத்த மாதம் 8-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

    செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்த வழக்கில் பொன்முடி மீதான விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக பொன்முடி எம்.எல்.ஏ., ராஜமகேந்திரன், கவுதமசிகாமணி, லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ., கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேர் ஆஜராகவில்லை. மற்ற 4 பேரும் ஆஜராகினார்கள்.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) மோனிகா, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதேபோல் பொன்முடி எம்.எல்.ஏ., அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கும் இதே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையையும் அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×