என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மோதி விபத்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பலி
Byமாலை மலர்12 Dec 2017 4:08 PM GMT (Updated: 12 Dec 2017 4:08 PM GMT)
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மோதி விபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகரச் செயலாளராக இருந்தவர் ஐ.ஆர். கணேசன் (வயது 46). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று கணேசன், பால்சாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
நக்கமங்கலம் விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஐ.ஆர். கணேசன் பரிதாபமாக இறந்தார். பால்சாமி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மாரிச்சாமியை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஐ.ஆர். கணேசன் தீவிர கட்சிப்பணி ஆற்றி வந்தார். பொது பிரச்சினைக்கு முன் நின்று பல போராட்டங்களை நடத்தியவர். அவரது உடலுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் கட்சியினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகரச் செயலாளராக இருந்தவர் ஐ.ஆர். கணேசன் (வயது 46). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று கணேசன், பால்சாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
நக்கமங்கலம் விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஐ.ஆர். கணேசன் பரிதாபமாக இறந்தார். பால்சாமி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மாரிச்சாமியை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஐ.ஆர். கணேசன் தீவிர கட்சிப்பணி ஆற்றி வந்தார். பொது பிரச்சினைக்கு முன் நின்று பல போராட்டங்களை நடத்தியவர். அவரது உடலுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் கட்சியினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X