என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஜினிகாந்த் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்: அர்ஜூன் சம்பத் நம்பிக்கை
Byமாலை மலர்12 Dec 2017 6:41 AM GMT (Updated: 12 Dec 2017 6:41 AM GMT)
தமிழகத்தில் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ரஜினிகாந்த் ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளதாக அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கோவை:
ரஜினிகாந்த் பிறந்த நாளான இன்று கோவையில் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினர்.
கோவை மாவட்ட ரஜினி காந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ரஜினிகாந்த் நீடுழி வாழ வேண்டி சலீவன் வீதியில் உள்ள ராகவேந்திரா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கதிர்வேல், டாக்டர் செல்வராஜ், பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினர். மன்ற நிர்வாகி குமரேசன் முன்னிலை வகித்தார்.
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார். அவரின் வருகையை மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். அவரது பணிகளை விரைவில் முடித்து விட்டு ஜனவரியில் அவர் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார். அப்போது அரசியல் அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கிறோம். அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ரஜினிகாந்த் ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, மாநில செயலாளர் செந்தில்குமார், மாணவரணி தலைவர் திருச்செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த் பிறந்த நாளான இன்று கோவையில் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினர்.
கோவை மாவட்ட ரஜினி காந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ரஜினிகாந்த் நீடுழி வாழ வேண்டி சலீவன் வீதியில் உள்ள ராகவேந்திரா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கதிர்வேல், டாக்டர் செல்வராஜ், பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினர். மன்ற நிர்வாகி குமரேசன் முன்னிலை வகித்தார்.
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார். அவரின் வருகையை மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். அவரது பணிகளை விரைவில் முடித்து விட்டு ஜனவரியில் அவர் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார். அப்போது அரசியல் அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கிறோம். அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ரஜினிகாந்த் ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, மாநில செயலாளர் செந்தில்குமார், மாணவரணி தலைவர் திருச்செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X