என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் விடிய விடிய கனமழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
ஸ்ரீவில்லிபுத்தூர்:
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. குடிநீர் பிரச்சினையும் தீர்ந்துள்ளது.
கடந்த வாரம் ஒக்கி புயல் காரணமாக தென்தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்தது.
விருதுநகர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் கடந்த மாதம் பெய்த மழையால் விவசாய பணிகள் தொடங்கின.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை லேசான மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக்நகர், இடையபொட்டில் தெரு, ஆத்துக்கடை தெருவில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழந்தது. விடிய விடிய மழை நீடித்தது. ராஜபாளையம் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கன மழை கொட்டியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்