search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டு அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை பலி
    X

    வத்தலக்குண்டு அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை பலி

    வத்தலக்குண்டு அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சி குன்னத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மகள் மித்ரா (வயது 4). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாகவே மித்ராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. விருவீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போதும் காய்ச்சலின் தீவிரம் குறையவில்லை.

    இதனைத் தொடர்ந்து மித்ரா மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மித்ரா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
    Next Story
    ×