என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலெக்டர் அலுவலகத்தில் கேபிள் ஆபரேட்டர்கள் முற்றுகை போராட்டம்: 300 பேர் கைது
Byமாலை மலர்22 Nov 2017 10:06 AM GMT (Updated: 22 Nov 2017 10:06 AM GMT)
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய கேபிள் ஆபரேட்டர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை பேட்டையை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் சந்திரசேகர் மீது அரசு கேபிள் தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இதனை கண்டித்தும், சந்திரசேகர் மீது பதிந்த வழக்கை வாபஸ் பெறக்கோரியும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் இருந்து 30 மாவட்டங்களைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், “சந்திரசேகர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அவர் மீது புகார் கூறிய தாசில்தார் தற்போது இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறப்பட்டிருந்தது. மனுவை கொடுத்துவிட்டு திரும்பிய அவர்கள் கலெக்டர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கேபிள் டி.வி. சங்க மாநில நிர்வாகிகள் ஆறுமுகம், விஷ்ணுராம், சேகர், ரமேஷ், கில்ட்பாண்டி உள்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை பேட்டையை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் சந்திரசேகர் மீது அரசு கேபிள் தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இதனை கண்டித்தும், சந்திரசேகர் மீது பதிந்த வழக்கை வாபஸ் பெறக்கோரியும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் இருந்து 30 மாவட்டங்களைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், “சந்திரசேகர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அவர் மீது புகார் கூறிய தாசில்தார் தற்போது இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறப்பட்டிருந்தது. மனுவை கொடுத்துவிட்டு திரும்பிய அவர்கள் கலெக்டர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கேபிள் டி.வி. சங்க மாநில நிர்வாகிகள் ஆறுமுகம், விஷ்ணுராம், சேகர், ரமேஷ், கில்ட்பாண்டி உள்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X