என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்வு
Byமாலை மலர்22 Nov 2017 9:44 AM GMT (Updated: 22 Nov 2017 9:44 AM GMT)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முதல் இன்று காலை வரை பாபநாசத்தில் அதிக பட்சமாக 105 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 3180.60கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு795.99 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் பலத்தமழை காரணமாக காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து செல்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவில் தண்ணீர் வெள்ளமாக செல்கிறது. நெல்லையிலும் தாமிரபரணி ஆற்றுக்கரையிலும் தண்ணீர் வெள்ளமாக செல்கிறது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 98.75 அடியாக இருந்தது. இன்று காலை 107.77 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 9 அடிநீர்மட்டம் உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 780 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 82.50 அடியாக இருந்தது. ஒரே நாளில் 1 அடி உயர்ந்து இன்று 83.40 அடியாக உள்ளது.
இது போல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் வருமாறு:-
பாபநாசம்-105, சேர்வலாறு-43, கடனாநதி-25, சங்கரன்கோவில்-22, ராமநதி-20, அம்பை-18, கருப்பாநதி-17, குண்டாறு-17. சேரன்மகாதேவி-16, கொடு முடியாறு-10, அடவிநயினார்-8.6, ஆய்க்குடி-4.8, செங்கோட்டை-2.
.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முதல் இன்று காலை வரை பாபநாசத்தில் அதிக பட்சமாக 105 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 3180.60கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு795.99 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் பலத்தமழை காரணமாக காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து செல்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவில் தண்ணீர் வெள்ளமாக செல்கிறது. நெல்லையிலும் தாமிரபரணி ஆற்றுக்கரையிலும் தண்ணீர் வெள்ளமாக செல்கிறது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 98.75 அடியாக இருந்தது. இன்று காலை 107.77 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 9 அடிநீர்மட்டம் உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 780 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 82.50 அடியாக இருந்தது. ஒரே நாளில் 1 அடி உயர்ந்து இன்று 83.40 அடியாக உள்ளது.
இது போல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் வருமாறு:-
பாபநாசம்-105, சேர்வலாறு-43, கடனாநதி-25, சங்கரன்கோவில்-22, ராமநதி-20, அம்பை-18, கருப்பாநதி-17, குண்டாறு-17. சேரன்மகாதேவி-16, கொடு முடியாறு-10, அடவிநயினார்-8.6, ஆய்க்குடி-4.8, செங்கோட்டை-2.
.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X