search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
    X
    கும்பகோணத்தில் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

    தஞ்சை, திருவாரூர், நாகையில் ரேசன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து தி.மு.க.சார்பில் இன்று ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வீதியில் உள்ள ரேசன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதே போல் தஞ்சை மாவட்டம் திருகானுர்பட்டி பகுதியில் உள்ள ரேசன் கடைமுன்பு ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. எம்.ராமச்சந்திரன் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ரேசன் கடைகளில் முறையாக பொருட்கள் வழங்க வேண்டும். மக்களுக்கு தட்டுப்பாடுகள் இன்றி அத்தியவாசிய பொருட்களை அரசு வழங்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 914 ரேசன் கடைகள் முன்பு அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கும்பகோணத்தில் சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவாரூர் மாவட்டத்தில் 715 ரேசன் கடைகள் உள்ளன. இதில் 402 ரேசன் கடைகள் முன்பு இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ரேசன் கடை முன்பு மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திரளான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இதுபோன்று மன்னார்குடி, திருத்துறைப் பூண்டி, நன்னிலம், கொரடாச்சேரி, பேரளம் போன்ற பகுதிகளிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நாகை மாவட்டத்தில் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள ரேசன் கடை முன்பு நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் ஏராளமான தி.மு.க உறுப்பினர்கள், நிர்வாகிகள், தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×