என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நூதன திருட்டு: புதிய காரின் 4 டயர்களையும் கழற்றி சென்ற மர்ம நபர்கள்
Byமாலை மலர்21 Nov 2017 4:12 PM GMT (Updated: 21 Nov 2017 4:12 PM GMT)
பெரம்பலூரில் இன்று காலை புதிய காரின் 4 டயரையும் மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 60), கார் டிரைவர். இவர் தனது சொந்த உபயோகத்திற்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பு புதிய கார் ஓன்றை வாங்கினார். அந்த காரை தனது வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் வீட்டின் முன்னால் காரை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் தூங்கினார்.
நேற்று நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்னால் நின்ற காரின் 4 டயரையும் கழற்றி விட்டு அதற்கு பதிலாக அங்கு கிடந்த கல், கட்டைகளை காரின் அடியில் வைத்து 4 சக்கரங்களுடன் கூடிய டயரை திருடிச் சென்றனர். இன்று காலை ராஜ் எழுந்து வந்து பார்த்தபோது 4 டயரும் இல்லாமல் புதிய கார் நின்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ் இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ஆகும்.
புதிய காரில் சக்கரங்களுடன் டயர் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 60), கார் டிரைவர். இவர் தனது சொந்த உபயோகத்திற்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பு புதிய கார் ஓன்றை வாங்கினார். அந்த காரை தனது வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் வீட்டின் முன்னால் காரை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் தூங்கினார்.
நேற்று நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்னால் நின்ற காரின் 4 டயரையும் கழற்றி விட்டு அதற்கு பதிலாக அங்கு கிடந்த கல், கட்டைகளை காரின் அடியில் வைத்து 4 சக்கரங்களுடன் கூடிய டயரை திருடிச் சென்றனர். இன்று காலை ராஜ் எழுந்து வந்து பார்த்தபோது 4 டயரும் இல்லாமல் புதிய கார் நின்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ் இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ஆகும்.
புதிய காரில் சக்கரங்களுடன் டயர் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X