என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் கடையில் தகராறு: போலீஸ்காரர் - ராணுவவீரர் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்21 Nov 2017 7:13 AM GMT (Updated: 21 Nov 2017 7:13 AM GMT)
டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர், ராணுவவீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
திருவேங்கடம் மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் செல்வம் (வயது 42) என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரின் கடைக்கு குலசேகரங்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (27) என்பவர் வந்துள்ளார். இவர் நெல்லை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவருடன் அவரின் தம்பி அருணாசலப்பிரதேசத்தில் ராணுவத்தில் பணியாற்றும் ராஜா (21) என்பவரும் அவரின் நண்பர் திவான் (எ) வேல் ராஜீம் வந்துள்ளனர். இவர்கள் கடையில் மது பாட்டில் வாங்கியுள்ளனர். பாட்டிலின் விலையை டாஸ்மாக் விற்பனையாளர் 330 என சொல்லியுள்ளார். அதற்கு செந்தில்குமார் வழக்கமாக வெளியில் 300 கொடுத்து தான் வாங்குவோம் இங்கு மட்டும் ஏன் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இவருடன் சேர்ந்து உடன் வந்தவர்களும் ரகளையில் ஈடுபட்டனராம். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த செல்வம் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் வாக்குவாதம் முற்றவே அவர்கள் 3 பேரும் சேர்ந்து செல்வத்தை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர்.
இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவேங்கடம் போலீசார் செந்தில்குமார், ராஜா, திவான் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
திருவேங்கடம் மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் செல்வம் (வயது 42) என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரின் கடைக்கு குலசேகரங்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (27) என்பவர் வந்துள்ளார். இவர் நெல்லை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவருடன் அவரின் தம்பி அருணாசலப்பிரதேசத்தில் ராணுவத்தில் பணியாற்றும் ராஜா (21) என்பவரும் அவரின் நண்பர் திவான் (எ) வேல் ராஜீம் வந்துள்ளனர். இவர்கள் கடையில் மது பாட்டில் வாங்கியுள்ளனர். பாட்டிலின் விலையை டாஸ்மாக் விற்பனையாளர் 330 என சொல்லியுள்ளார். அதற்கு செந்தில்குமார் வழக்கமாக வெளியில் 300 கொடுத்து தான் வாங்குவோம் இங்கு மட்டும் ஏன் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இவருடன் சேர்ந்து உடன் வந்தவர்களும் ரகளையில் ஈடுபட்டனராம். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த செல்வம் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் வாக்குவாதம் முற்றவே அவர்கள் 3 பேரும் சேர்ந்து செல்வத்தை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர்.
இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவேங்கடம் போலீசார் செந்தில்குமார், ராஜா, திவான் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X