என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூவத்தூரில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம அலுவலர் கைது
Byமாலை மலர்21 Nov 2017 6:19 AM GMT (Updated: 21 Nov 2017 6:20 AM GMT)
கூவத்தூரில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரை சேர்ந்தவர் தயாளன். இவர் தனது நிலத்துக்கு பட்டா மாற்றம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் நடராஜனிடம் மனு அளித்தார்.
இதனை ஆய்வு செய்த நடராஜன் நிலத்தில் சில வில்லங்கம் இருப்பதால் அதனை சரி செய்ய ரூ.5 லட்சம் செலவாகும். முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத தயாளன் இது பற்றி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனை படி தயாளன்ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை கிராம அலுவலர் நடராஜனிடம் கொடுத்தார்.
அதனை அவர் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நடராஜனை கைது செய்தனர். இது பற்றி அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X