என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலை வாங்கி தருவதாக மோசடி: தலைமறைவான அ.தி.மு.க. பெண் நிர்வாகி கைது
Byமாலை மலர்20 Nov 2017 8:54 AM GMT (Updated: 20 Nov 2017 8:54 AM GMT)
ஈரோடு அருகே வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அ.தி.மு.க. பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்து அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம் ஓடப்பள்ளியை சேர்ந்த தங்கராசு (வயது 55) என்பவர் அதே பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவரிடம் உறவினரின் மகனுக்கு வேலை வாங்க ரூ. 11 லட்சம் பணம் கொடுத்தார்.
வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் கல்யாணி மோசடி செய்தார். இதனால் விரக்தி அடைந்த தங்கராசு தீக்குளித்தார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவர் இறந்த தகவல் அறிந்ததும் அவரது சொந்த ஊரில் இருந்து உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பள்ளிபாளையம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் யுவராஜ் மற்றும் தி.மு.க.வினரும் அங்கு வந்தனர்.
அவர்கள் அனைவரும் தங்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். உறவினர்களும், தி.மு.க.வினரும் திரண்டதால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தங்கராசு சாவுக்கு காரணமான கல்யாணியை கைது செய்ய வேண்டும். அவரிடம் இருந்து ரூ. 11 லட்சத்தை மீட்க வேண்டும். இல்லாவிட்டால் பிரேத பரிசோதனை முடித்து தங்கராசு பிணத்தை நாங்கள் வாங்கமாட்டோம் என்று கூறி உறவினர்கள் கூறினர்.
இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்தது. சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிபாளையம் போலீஸ் பாலமுருகன் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அவரிடமும் உறவினர்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போது அவர்களிடம், ‘‘கல்யாணியை கைது செய்துவிட்டோம். ரூ.11 லட்சத்தை அவரிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்‘‘ என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து உறவினர்கள் சமாதானம் அடைந்தனர். கைதான கல்யாணி மீது பள்ளிபாளையம் போலீசார் மோசடி, தற்கொலைக்கு தூண்டியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம் ஓடப்பள்ளியை சேர்ந்த தங்கராசு (வயது 55) என்பவர் அதே பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவரிடம் உறவினரின் மகனுக்கு வேலை வாங்க ரூ. 11 லட்சம் பணம் கொடுத்தார்.
வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் கல்யாணி மோசடி செய்தார். இதனால் விரக்தி அடைந்த தங்கராசு தீக்குளித்தார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவர் இறந்த தகவல் அறிந்ததும் அவரது சொந்த ஊரில் இருந்து உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பள்ளிபாளையம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் யுவராஜ் மற்றும் தி.மு.க.வினரும் அங்கு வந்தனர்.
அவர்கள் அனைவரும் தங்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். உறவினர்களும், தி.மு.க.வினரும் திரண்டதால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தங்கராசு சாவுக்கு காரணமான கல்யாணியை கைது செய்ய வேண்டும். அவரிடம் இருந்து ரூ. 11 லட்சத்தை மீட்க வேண்டும். இல்லாவிட்டால் பிரேத பரிசோதனை முடித்து தங்கராசு பிணத்தை நாங்கள் வாங்கமாட்டோம் என்று கூறி உறவினர்கள் கூறினர்.
இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்தது. சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிபாளையம் போலீஸ் பாலமுருகன் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அவரிடமும் உறவினர்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போது அவர்களிடம், ‘‘கல்யாணியை கைது செய்துவிட்டோம். ரூ.11 லட்சத்தை அவரிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்‘‘ என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து உறவினர்கள் சமாதானம் அடைந்தனர். கைதான கல்யாணி மீது பள்ளிபாளையம் போலீசார் மோசடி, தற்கொலைக்கு தூண்டியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X