search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் மாயமான பிளஸ்-1 மாணவரை சென்னையில் தேடுகிறரர்கள்
    X

    தூத்துக்குடியில் மாயமான பிளஸ்-1 மாணவரை சென்னையில் தேடுகிறரர்கள்

    தூத்துக்குடியில் மாயமான பிளஸ்-1 மாணவரை தேடி போலீசார் சென்னையில் தேடுகிறரர்கள்.

    சென்னை:

    தூத்துக்குடி போல்டன் புரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஸ்ரீவத்ஸன் (17). தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கடந்த 6-ந்தேதி காலை ஸ்ரீவத்ஸன் பள்ளியில் இருந்து சாரணர் முகாமிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கண்ணன் தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஸ்ரீவத்ஸனை தேடி வருகிறார்கள். மாயமான ஸ்ரீவத்ஸன் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ஒரு நபரின் செல்போனை வாங்கி தாயை தொடர்பு கொண்டு பேசி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

    இதனால் ஸ்ரீவத்ஸன் சென்னையிலேயே சுற்றி திரியலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை தேடி போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

    Next Story
    ×