என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜி.எஸ்.டி. - ஆன்லைன் வணிகத்தை கண்டித்து ஜனவரி 1-ந்தேதி கருப்பு கொடி போராட்டம்: வெள்ளையன் பேட்டி
Byமாலை மலர்16 Nov 2017 10:33 AM GMT (Updated: 16 Nov 2017 10:33 AM GMT)
ஜி.எஸ்.டி-ஆன்லைன் வணிகத்தை கண்டித்து ஜனவரி 1-ந் தேதி கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று வெள்ளையன் அறிவித்து உள்ளார்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பட்டிவீரன்பட்டிக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து ஜனவரி முதல் தேதி தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும். 25 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி கொண்டு வரப்படும் என்கின்றனர். இது இணையதளம் மூலமாக, கிராமப்புறங்களில் ஆன்லைன் வர்த்தகத்தை கொண்டு வந்து, உள்நாட்டு வணிகத்தை ஒழிப்பதற்காக போடப்பட்ட திட்டம். ஒரே நாடு ஒரே வரி என்பது பயன்தராது. ஒரே இடத்திலிருந்து இயங்கும் அன்னிய கம்பெனிகளுக்குதான் சாதகமாகும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை இல்லை. மத்திய அரசு பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்ப்பை சமாளிப்பதற்காகவே ஜி.எஸ்.டியை கூட்டி தற்போது குறைத்துள்ளது.
2007ம் ஆண்டு வாட்வரி கொண்டு வரப்பட்டது. இதுவும் வெளிநாட்டில் இருந்து வந்த வரிதான். தற்போது வந்துள்ள ஜி.எஸ்.டி.யும் வெளிநாட்டிலிருந்து வந்ததுதான். இவையெல்லாம் வெளிநாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பட்டிவீரன்பட்டிக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து ஜனவரி முதல் தேதி தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும். 25 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி கொண்டு வரப்படும் என்கின்றனர். இது இணையதளம் மூலமாக, கிராமப்புறங்களில் ஆன்லைன் வர்த்தகத்தை கொண்டு வந்து, உள்நாட்டு வணிகத்தை ஒழிப்பதற்காக போடப்பட்ட திட்டம். ஒரே நாடு ஒரே வரி என்பது பயன்தராது. ஒரே இடத்திலிருந்து இயங்கும் அன்னிய கம்பெனிகளுக்குதான் சாதகமாகும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை இல்லை. மத்திய அரசு பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்ப்பை சமாளிப்பதற்காகவே ஜி.எஸ்.டியை கூட்டி தற்போது குறைத்துள்ளது.
2007ம் ஆண்டு வாட்வரி கொண்டு வரப்பட்டது. இதுவும் வெளிநாட்டில் இருந்து வந்த வரிதான். தற்போது வந்துள்ள ஜி.எஸ்.டி.யும் வெளிநாட்டிலிருந்து வந்ததுதான். இவையெல்லாம் வெளிநாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X