search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. - ஆன்லைன் வணிகத்தை கண்டித்து ஜனவரி 1-ந்தேதி கருப்பு கொடி போராட்டம்: வெள்ளையன் பேட்டி
    X

    ஜி.எஸ்.டி. - ஆன்லைன் வணிகத்தை கண்டித்து ஜனவரி 1-ந்தேதி கருப்பு கொடி போராட்டம்: வெள்ளையன் பேட்டி

    ஜி.எஸ்.டி-ஆன்லைன் வணிகத்தை கண்டித்து ஜனவரி 1-ந் தேதி கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று வெள்ளையன் அறிவித்து உள்ளார்.
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பட்டிவீரன்பட்டிக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து ஜனவரி முதல் தேதி தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும். 25 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி கொண்டு வரப்படும் என்கின்றனர். இது இணையதளம் மூலமாக, கிராமப்புறங்களில் ஆன்லைன் வர்த்தகத்தை கொண்டு வந்து, உள்நாட்டு வணிகத்தை ஒழிப்பதற்காக போடப்பட்ட திட்டம். ஒரே நாடு ஒரே வரி என்பது பயன்தராது. ஒரே இடத்திலிருந்து இயங்கும் அன்னிய கம்பெனிகளுக்குதான் சாதகமாகும்.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை இல்லை. மத்திய அரசு பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்ப்பை சமாளிப்பதற்காகவே ஜி.எஸ்.டியை கூட்டி தற்போது குறைத்துள்ளது.

    2007ம் ஆண்டு வாட்வரி கொண்டு வரப்பட்டது. இதுவும் வெளிநாட்டில் இருந்து வந்த வரிதான். தற்போது வந்துள்ள ஜி.எஸ்.டி.யும் வெளிநாட்டிலிருந்து வந்ததுதான். இவையெல்லாம் வெளிநாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×