என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீனவர்களின் நாளைய போராட்டம் ரத்து: மீனவ அமைப்புகள் அறிவிப்பு
Byமாலை மலர்15 Nov 2017 5:33 PM GMT (Updated: 15 Nov 2017 5:33 PM GMT)
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடலோர காவல் படை துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து நாளை நடைபெறவுள்ள போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடலோர காவல் படை துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து நாளை நடைபெறவுள்ள போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று மீன்பிடித்த மீனவர்களின் படகை இந்திய கடலோர காவல் படையின் ராணி அபாகா கப்பல் வழிமறித்துள்ளது. பின்னர், வீரர்கள் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். கம்புகளாலும் இரும்பு கம்பிகளாலும் மீனவர்களை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடலோர காவல் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மீனவர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு
செய்திருந்தனர்.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள போராட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக மீனவ அமைப்புகள் கூறுகையில், கடலோர காவல் படையினர் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை நடக்கவிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் இனி நிகழாது என கடலோர காவல்படை உறுதியளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் 18-ம் தேதி முதல் மீன் பிடிக்க செல்வதாக அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளன.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடலோர காவல் படை துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து நாளை நடைபெறவுள்ள போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று மீன்பிடித்த மீனவர்களின் படகை இந்திய கடலோர காவல் படையின் ராணி அபாகா கப்பல் வழிமறித்துள்ளது. பின்னர், வீரர்கள் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். கம்புகளாலும் இரும்பு கம்பிகளாலும் மீனவர்களை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடலோர காவல் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மீனவர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு
செய்திருந்தனர்.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள போராட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக மீனவ அமைப்புகள் கூறுகையில், கடலோர காவல் படையினர் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை நடக்கவிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் இனி நிகழாது என கடலோர காவல்படை உறுதியளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் 18-ம் தேதி முதல் மீன் பிடிக்க செல்வதாக அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X