என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருமான வரி சோதனையால் எங்களை யாரும் மிரட்ட முடியாது: கலைச்செல்வன் எம்.எல்.ஏ.
Byமாலை மலர்14 Nov 2017 6:52 AM GMT (Updated: 14 Nov 2017 6:52 AM GMT)
சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்பத்தினரை குறிவைத்து நடத்தும் வருமான வரிசோதனையால் எங்களை யாரும் திரட்ட முடியாது என விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் கூறினார்.
பண்ருட்டி:
தினகரன் அணி கடலூர் மாவட்ட செயலாளரும், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கலைச்செல்வன் பண்ருட்டியில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரை குறிவைத்து நடத்தும் வருமான வரி துறையினரின் சோதனை வன்மையாக கண்டிக்கதக்கது. நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான்கிடைக்கும்.
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தற்போது வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைகளால் எங்களை மிரட்ட முடியாது. இந்த சொத்துக்கள் உழைப்பால் வந்த சொத்துக்கள்.
இந்த வருமான வரிசோதனை நடவடிக்கை யாருடைய தூண்டுதலின் பேரில் மத்திய அரசு நடத்துகிறது என்று பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வந்த பிறகு அவர்களின் முகத்திரை கிழியும்.
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நாங்கள் கழகத்தின் சார்பில் நடத்துகிறோம். ஆனால் அவர்கள் அரசு சார்பில் நடத்துகின்றனர். வருமான வரி சோதனை நடவடிக்கைகள் ஆட்சியாளரின் கையாலாகாதனத்தை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தினகரன் அணி கடலூர் மாவட்ட செயலாளரும், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கலைச்செல்வன் பண்ருட்டியில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரை குறிவைத்து நடத்தும் வருமான வரி துறையினரின் சோதனை வன்மையாக கண்டிக்கதக்கது. நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான்கிடைக்கும்.
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தற்போது வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைகளால் எங்களை மிரட்ட முடியாது. இந்த சொத்துக்கள் உழைப்பால் வந்த சொத்துக்கள்.
இந்த வருமான வரிசோதனை நடவடிக்கை யாருடைய தூண்டுதலின் பேரில் மத்திய அரசு நடத்துகிறது என்று பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வந்த பிறகு அவர்களின் முகத்திரை கிழியும்.
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நாங்கள் கழகத்தின் சார்பில் நடத்துகிறோம். ஆனால் அவர்கள் அரசு சார்பில் நடத்துகின்றனர். வருமான வரி சோதனை நடவடிக்கைகள் ஆட்சியாளரின் கையாலாகாதனத்தை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X