என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கி கடனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
Byமாலை மலர்14 Nov 2017 4:17 AM GMT (Updated: 14 Nov 2017 4:17 AM GMT)
காட்டுமன்னார்கோவிலில் வங்கி கடனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அரசு நல்ல விலை வழங்க வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே சிதம்பரம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
21-ந் தேதி விவசாயிகள் ஒன்று திரண்டு டெல்லியில் போட்டி பாராளுமன்ற கூட்டமும், 22-ந் தேதி பெண்கள் கலந்து கொள்ளும் போட்டி பாராளுமன்ற கூட்டமும் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அரசு நல்ல விலை வழங்க வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே சிதம்பரம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
21-ந் தேதி விவசாயிகள் ஒன்று திரண்டு டெல்லியில் போட்டி பாராளுமன்ற கூட்டமும், 22-ந் தேதி பெண்கள் கலந்து கொள்ளும் போட்டி பாராளுமன்ற கூட்டமும் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X