search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் புதுச்சேரி கவர்னர் கிரண் பேடியின் சகோதரிக்கு அறுவை சிகிச்சை
    X

    கோவையில் புதுச்சேரி கவர்னர் கிரண் பேடியின் சகோதரிக்கு அறுவை சிகிச்சை

    கோவையில் கவர்னர் கிரண்பேடியின் சகோதரிக்கு முழங்கால் தசை நார் கிழிந்து இருப்பதை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை நடக்கிறது.
    கோவை:

    புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடியின் சகோதரி அனு (வயது 62). இவர் கடந்த சில மாதங்களாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவரது இடது முழங்காலில் தசை நார் கிழிந்து இருப்பது தெரியவந்தது.

    இவரை பார்ப்பதற்காக புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடி நேற்று வந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று தனது சகோதரியை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் இரவு தங்குவதற்காக வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு சென்று தங்கினார்.

    இன்று காலை கவர்னர் கிரண்பேடியின் சகோதரிக்கு முழங்கால் தசை நார் கிழிந்து இருப்பதை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை நடக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்ததும் தனது சகோதரியை கவர்னர் கிரண்பேடி பார்த்து விட்டு இன்று மாலை புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    Next Story
    ×