search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    கனமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

    வடகிழக்கு பருவமழையினால் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    நாகை/திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழையினால் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் பிறபகுதிகளான திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால் மேற்கண்ட இரு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.

    தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பாதிப்புக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×