என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் மீது வழக்குபதிவு
Byமாலை மலர்7 Nov 2017 10:14 AM GMT (Updated: 7 Nov 2017 10:14 AM GMT)
கோவை பாரதியார் பல்கலைகழக துணை வேந்தர் மீது மனித உரிமை ஆணையத்தில் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடவள்ளி:
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் பாரதியார் பல்கலை கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் டிரைவ ராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி லட்சுமி பிரபா(வயது 32) பாரதியார் பல்கலைகழகத்தில் உயிர் வேதியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
இவர் அதேபல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு பணி வழங்கப்படவில்லை.
இதையடுத்து பல்கலை கழக மானியக்குழு விதிமுறைகளை சுட்டிக்காட்டி லட்சுமி பிரபா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் லட்சுமி பிரபா மற்றொரு பிரிவிலும் முனைவர் பட்டத்துக்காக பாரதியார் பல்கலை கழகத்தில் விண்ணப்பித்திருக்கிறார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் தன்னை படிக்க விடாமல் இடையூறு செய்வதாகவும், அதே பல்கலைகழகத்தில் கார் டிரைவராக பணியாற்றும் தனது கணவரை உரிய காரணமின்றி சஸ்பெண்டு செய்ததாகவும் துணைவேந்தர் கணபதி மீது லட்சுமி பிரபா தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரி மாரிமுத்து நேற்று பல்கலை கழகத்தில் விசாரணையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் லட்சுமி பிரபா புகாரின்பேரில் துணை வேந்தர் கணபதி மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வட வள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் பாரதியார் பல்கலை கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் டிரைவ ராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி லட்சுமி பிரபா(வயது 32) பாரதியார் பல்கலைகழகத்தில் உயிர் வேதியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
இவர் அதேபல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு பணி வழங்கப்படவில்லை.
இதையடுத்து பல்கலை கழக மானியக்குழு விதிமுறைகளை சுட்டிக்காட்டி லட்சுமி பிரபா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் லட்சுமி பிரபா மற்றொரு பிரிவிலும் முனைவர் பட்டத்துக்காக பாரதியார் பல்கலை கழகத்தில் விண்ணப்பித்திருக்கிறார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் தன்னை படிக்க விடாமல் இடையூறு செய்வதாகவும், அதே பல்கலைகழகத்தில் கார் டிரைவராக பணியாற்றும் தனது கணவரை உரிய காரணமின்றி சஸ்பெண்டு செய்ததாகவும் துணைவேந்தர் கணபதி மீது லட்சுமி பிரபா தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரி மாரிமுத்து நேற்று பல்கலை கழகத்தில் விசாரணையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் லட்சுமி பிரபா புகாரின்பேரில் துணை வேந்தர் கணபதி மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வட வள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X