என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் இன்று வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
Byமாலை மலர்7 Nov 2017 5:38 AM GMT (Updated: 7 Nov 2017 5:38 AM GMT)
ஈரோட்டில் புதிய கட்டிடங்களில் வட்டார வள மையங்கள் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஈரோடு பெரியார் வீதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது, இப்பள்ளியில் 306 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை செயல்படுகிறது.
பள்ளியில் மொத்தம் 9 வகுப்புகள் உள்ளன. இந்த வகுப்புகள் போதாது கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என ஏற்கெனவே மாணவ - மாணவிகளும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த பள்ளியில் கூடுதலாக 5 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடங்களில் வகுப்பறைகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இந்த 5 புதிய கட்டிடங்களிலும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வளர்ச்சி மைய அலுவலங்களாக செயல்பட்டு வருகிறது.
இது மாணவ- மாணவிகளையும் பெற்றோர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மாணவர்கள் கூறும் போது, “பள்ளியில் எங்களுக்கே போதிய வகுப்பறைகள் கிடையாது 2 வகுப்புகளை ஒன்றாக சேர்த்து பாடம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் புதிய கட்டிடத்தில் வட்டார வள மைய அலுவலகத்தை எப்படி செயல்படுத்தலாம்! என்று கூறினர். பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடம் வந்த மாணவ- மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். பள்ளிக்கூடம் முன் தரையில் மாணவ- மாணவிகள் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வள மையத்தை அகற்றிவிட்டு பள்ளி வகுப்பறை கட்டிடமாக்க வேண்டும் என்று கோரி மாணவ- மாணவிகள் கோஷமிட்டனர்.
மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதாமணி ஆகியோர் இருந்தனர்.
ஈரோடு பெரியார் வீதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது, இப்பள்ளியில் 306 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை செயல்படுகிறது.
பள்ளியில் மொத்தம் 9 வகுப்புகள் உள்ளன. இந்த வகுப்புகள் போதாது கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என ஏற்கெனவே மாணவ - மாணவிகளும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த பள்ளியில் கூடுதலாக 5 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடங்களில் வகுப்பறைகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இந்த 5 புதிய கட்டிடங்களிலும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வளர்ச்சி மைய அலுவலங்களாக செயல்பட்டு வருகிறது.
இது மாணவ- மாணவிகளையும் பெற்றோர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மாணவர்கள் கூறும் போது, “பள்ளியில் எங்களுக்கே போதிய வகுப்பறைகள் கிடையாது 2 வகுப்புகளை ஒன்றாக சேர்த்து பாடம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் புதிய கட்டிடத்தில் வட்டார வள மைய அலுவலகத்தை எப்படி செயல்படுத்தலாம்! என்று கூறினர். பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடம் வந்த மாணவ- மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். பள்ளிக்கூடம் முன் தரையில் மாணவ- மாணவிகள் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வள மையத்தை அகற்றிவிட்டு பள்ளி வகுப்பறை கட்டிடமாக்க வேண்டும் என்று கோரி மாணவ- மாணவிகள் கோஷமிட்டனர்.
மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதாமணி ஆகியோர் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X