search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

    திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    திருச்சி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாநகரிலும், புறநகரிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது லேசான வெயில் தலை காட்டியது. பகலில் கருமேகங்கள் திரண்ட நிலையில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.

    இந்த நிலையில் இரவு மிதமான மழை பெய்தது. இன்று காலையும் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண் டம், திருமானூர், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது. அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டத்தில் அதிகபட்சமாக 63 மி.மீ., மழை பெய்துள்ளது. இதே போல் திருமானூரில் 23 மி.மீ., அரியலூரில் 13 மி.மீ., செந்துறை யில் 3.4. மி. மீ. மழை பதிவாகியுள்ளது.

    கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்த நிலையில் இன்று காலை மழை பெய்யவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு லேசான தூறலுடன் மழை பெய்து வருகிறது. இதில் செட்டிக்குளத்தில் 2 மி.மீ., பெரம்பலூரில் 1 மி.மீ., தழு தாழையில் 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்றிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மாவட்டத்திற்குட்பட்ட அன்னவாசல், இலுப்பூர், ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், நாகுடி, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதே போல் கடலோர பகுதிகளான மணமேல்குடி, கட்டுமாவடி, கோட்டைப்பட் டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார்.

    தற்போது பெய்து வரும் மழை மானாவாரி பயிர்களுக்கும், சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் 5 மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×