என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூரில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூடியது
Byமாலை மலர்24 Oct 2017 4:56 AM GMT (Updated: 24 Oct 2017 4:56 AM GMT)
கரூரில் இன்று தொடங்கிய பா.ஜ.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டனர்.
கரூர்:
கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 11 மணிக்கு பா.ஜ.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடியது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமை தாங்கி பேசினார்.
இதில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பல தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். கர்நாடகாவை சேர்ந்த தேசிய பொதுக்குழு உறுப்பினர் சி.பி.ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.
கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப்பணிகள், பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் மத்திய அரசின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்கொள்வது, ஜி.எஸ்.டி. எதிர்ப்பலையை சமாளிப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.
செயற்குழு கூடுவதை தொடர்ந்து கரூர் நகரில் பா.ஜ.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.
நேற்று மாலை முதல் மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கரூரில் திரண்டுள்ளனர்.
கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 11 மணிக்கு பா.ஜ.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடியது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமை தாங்கி பேசினார்.
இதில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பல தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். கர்நாடகாவை சேர்ந்த தேசிய பொதுக்குழு உறுப்பினர் சி.பி.ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.
கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப்பணிகள், பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் மத்திய அரசின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்கொள்வது, ஜி.எஸ்.டி. எதிர்ப்பலையை சமாளிப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.
செயற்குழு கூடுவதை தொடர்ந்து கரூர் நகரில் பா.ஜ.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.
நேற்று மாலை முதல் மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கரூரில் திரண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X