search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூரில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூடியது
    X

    கரூரில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூடியது

    கரூரில் இன்று தொடங்கிய பா.ஜ.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டனர்.
    கரூர்:

    கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 11 மணிக்கு பா.ஜ.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடியது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமை தாங்கி பேசினார்.

    இதில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பல தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். கர்நாடகாவை சேர்ந்த தேசிய பொதுக்குழு உறுப்பினர் சி.பி.ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.

    கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப்பணிகள், பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் மத்திய அரசின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்கொள்வது, ஜி.எஸ்.டி. எதிர்ப்பலையை சமாளிப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    செயற்குழு கூடுவதை தொடர்ந்து கரூர் நகரில் பா.ஜ.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

    நேற்று மாலை முதல் மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கரூரில் திரண்டுள்ளனர்.

    Next Story
    ×