search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உசிலம்பட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலி
    X

    உசிலம்பட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலி

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

    விருதுநகர்:

    உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் சொக்கதேவன்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ஹரீஷ் (வயது 8). 2-ம் வகுப்பு மாணவன்.

    கடந்த சில நாட்களாக ஹரீஷ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதற்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு 4 நாட்கள் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

    இதனைத் தொடர்ந்து மாணவன் ஹரீஷ், மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை ஹரீஷ் பரிதாபமாக இறந்தான்.

    அவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மாணவன் சாவு, சொக்க தேவன்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×