என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பு - சர்ச்சை கருத்துக்களை நீக்க தயார் என மெர்சல் தரப்பில் அறிவிப்பு
Byமாலை மலர்21 Oct 2017 2:09 PM GMT (Updated: 21 Oct 2017 2:09 PM GMT)
மெர்சல் திரைப்பட விவகாரத்தில் தயாரிப்பாளர் தரப்பினர் பா.ஜ.க தலைவர்களை சந்தித்ததை அடுத்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க தயார் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை:
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது.
இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது.
மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மெர்சல் திரைப்படத்தை தயாரித்த தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. இது தொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர்களை சந்தித்து விளக்கமளித்தோம். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் எங்களது அனுகு முறையை பாராட்டினர். அதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர்களது பார்வையில் அவர்கள் எதிர்ப்பு நியாமாகவே உள்ளது. தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை நீக்க தயாராகவே இருக்கிறோம்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது.
இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது.
மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மெர்சல் திரைப்படத்தை தயாரித்த தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. இது தொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர்களை சந்தித்து விளக்கமளித்தோம். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் எங்களது அனுகு முறையை பாராட்டினர். அதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர்களது பார்வையில் அவர்கள் எதிர்ப்பு நியாமாகவே உள்ளது. தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை நீக்க தயாராகவே இருக்கிறோம்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X