search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை
    X

    விருத்தாசலத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை

    விருத்தாசலத்தில் காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருத்தாசலம்:

    மதுரை மேலூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ஜாஸ்மின் என்கிற ரேவதி(21). இவர் விருத்தாசலம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜாபர் அலி என்பவரை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் ஜாஸ்மின் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அறிந்த அவரது தாய் சரஸ்வதி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணம் ஆகி 1½ வருடத்தில் இளம்பெண் இறந்து விட்டதால் விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷ்ணி சந்திரா இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×