search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு முழுவதும் நாளை வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
    X

    தமிழ்நாடு முழுவதும் நாளை வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் நாளை வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் நாளை வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடக்கிறது.

    அதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யலாம்.

    அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். பெயர் சேர்க்கும் விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி, வயது சான்று சமர்பிக்க வேண்டும், 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கண்டிப்பாக வயது சான்றிதழ் வழங்க வேண்டும்.

    18 முதல் 25 வயதிற்குட்பட்டோர் தவிர மற்றவர்கள் தங்களுடைய முந்தைய முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் ஆகியவற்றை படிவத்தில் குறிப்பிடவேண்டும்.

    இருப்பிட மாற்றம் செய்யாமல் இருந்தால் தற்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவையும், ஏற்கனவே பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

    ஆன்-லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.nvsp.in என்ற இணைய தள முகவரியிலும் விண்ணப் பிக்கலாம். 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விணப்பிக்கலாம்.

    இத்தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×