என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் நாளை வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் நாளை வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடக்கிறது.
அதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யலாம்.
அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். பெயர் சேர்க்கும் விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி, வயது சான்று சமர்பிக்க வேண்டும், 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கண்டிப்பாக வயது சான்றிதழ் வழங்க வேண்டும்.
18 முதல் 25 வயதிற்குட்பட்டோர் தவிர மற்றவர்கள் தங்களுடைய முந்தைய முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் ஆகியவற்றை படிவத்தில் குறிப்பிடவேண்டும்.
இருப்பிட மாற்றம் செய்யாமல் இருந்தால் தற்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவையும், ஏற்கனவே பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.nvsp.in என்ற இணைய தள முகவரியிலும் விண்ணப் பிக்கலாம். 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விணப்பிக்கலாம்.
இத்தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்