என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமைச் செயலகத்தில் கிழிந்து பறந்த தேசியக்கொடி
Byமாலை மலர்21 Oct 2017 4:22 AM GMT (Updated: 21 Oct 2017 4:22 AM GMT)
சென்னை தலைமைச் செயலகத்தில் கிழிந்து பறந்த தேசியக்கொடியால் பரபரப்பு ஏற்பட்டது. அதைக் கவனித்த ராணுவத்தினர் உடனடியாக புதிய கொடி ஒன்றை கம்பத்தில் ஏற்றினர்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் கோட்டை கொத்தளம் அமைந்துள்ளது. இங்குள்ள கொடிக்கம்பத்தில் பகல் வேளையில் தேசியக்கொடி பறக்கப்படுவது வழக்கம். காலை 6 மணியளவில் ஏற்றப்படும் தேசியக்கொடி, மாலை 6 மணிக்கு இறக்கப்படும். இந்தக் கொடியை ராணுவத்தினர் பராமரித்து வருகின்றனர்.
நேற்று காலையில் வழக்கம்போல தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பிற்பகலில் அந்தக் கொடியில் உள்ள பச்சை நிறத்தின் கீழ் பகுதியில் வட்டமாக கொடி கிழிந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து வாட்ஸ்ஆப் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிடப்பட்டது. அதைக் கவனித்த ராணுவத்தினர் உடனடியாக கிழிந்த தேசியக் கொடியை கீழ் இறக்கினர்.
மாறாக புதிய கொடி ஒன்றை உரிய மரியாதை செலுத்தும் கம்பத்தில் ஏற்றினர். தலைமைச் செயலகத்தில் சுமார் 20 நிமிடம் கிழிந்த கொடி பறந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொடி ஏற்றும் போதே கிழிந்திருந்ததா அல்லது ஏற்றப்பட்ட பிறகு கிழிந்ததா என்பது தெரியவில்லை.
சென்னை தலைமைச் செயலகத்தில் கோட்டை கொத்தளம் அமைந்துள்ளது. இங்குள்ள கொடிக்கம்பத்தில் பகல் வேளையில் தேசியக்கொடி பறக்கப்படுவது வழக்கம். காலை 6 மணியளவில் ஏற்றப்படும் தேசியக்கொடி, மாலை 6 மணிக்கு இறக்கப்படும். இந்தக் கொடியை ராணுவத்தினர் பராமரித்து வருகின்றனர்.
நேற்று காலையில் வழக்கம்போல தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பிற்பகலில் அந்தக் கொடியில் உள்ள பச்சை நிறத்தின் கீழ் பகுதியில் வட்டமாக கொடி கிழிந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து வாட்ஸ்ஆப் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிடப்பட்டது. அதைக் கவனித்த ராணுவத்தினர் உடனடியாக கிழிந்த தேசியக் கொடியை கீழ் இறக்கினர்.
மாறாக புதிய கொடி ஒன்றை உரிய மரியாதை செலுத்தும் கம்பத்தில் ஏற்றினர். தலைமைச் செயலகத்தில் சுமார் 20 நிமிடம் கிழிந்த கொடி பறந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொடி ஏற்றும் போதே கிழிந்திருந்ததா அல்லது ஏற்றப்பட்ட பிறகு கிழிந்ததா என்பது தெரியவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X