search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளம் அருகே நர்சிங் மாணவியை கற்பழித்த வாலிபர் கைது
    X

    பெரியகுளம் அருகே நர்சிங் மாணவியை கற்பழித்த வாலிபர் கைது

    பெரியகுளம் அருகே நர்சிங் மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகில் உள்ள ஏ.மீனாட்சிபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த செல்வம் மகன் ஆனந்தராஜ் (வயது24). இவர் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்தார். சம்பவத்தன்று அவரை ஆனந்தராஜ் ஆசை வார்த்தை கூறி தனது பைக்கில் அழைத்து சென்றார்.

    தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பலவந்தமாக கற்பழித்துள்ளார். அதன்பின் வீட்டிற்கு வந்த பெண்ணிற்கு உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அவரது பெற்றோர் விசாரித்தபோது நடந்த விபரங்களை கூறி உள்ளார்.

    இதை கேட்டதும் அதிச்சி அடைந்த அவரது தந்தை தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர்.

    Next Story
    ×