என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணியம்பாடியில் மின் இணைப்புக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
Byமாலை மலர்20 Oct 2017 7:55 AM GMT (Updated: 20 Oct 2017 7:55 AM GMT)
வாணியம்பாடியில் மின் இணைப்புக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார். மின்வாரிய அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கோட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஷாகிப். இவர், புதியதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, மின் இணைப்பு பெற, ஆலங்காயம் மின் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலு, புதிய மின் இணைப்பு கட்டணம் உள்பட கூடுதலாக ரூ.6 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என்று கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அப்துல் ஷாகிப், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், மின் வாரிய அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர்.
அதன்படி, இன்று காலை ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரம் ரொக்கப் பணத்தை அப்துல் ஷாகிப்பிடம் கொடுத்து அனுப்பினர். அவர், ஆலங்காயம் மின்வாரிய அலுவகத்திற்கு ரசாயனம் தடவிய பணத்துடன் சென்றார்.
அலுவலகத்தில் அவரது அறையில் இருந்த அதிகாரி பாலுவிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட போது, அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக அதிகாரி பாலுவை பிடித்து கைது செய்தனர்.
மின்வாரிய அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கோட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஷாகிப். இவர், புதியதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, மின் இணைப்பு பெற, ஆலங்காயம் மின் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலு, புதிய மின் இணைப்பு கட்டணம் உள்பட கூடுதலாக ரூ.6 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என்று கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அப்துல் ஷாகிப், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், மின் வாரிய அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர்.
அதன்படி, இன்று காலை ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரம் ரொக்கப் பணத்தை அப்துல் ஷாகிப்பிடம் கொடுத்து அனுப்பினர். அவர், ஆலங்காயம் மின்வாரிய அலுவகத்திற்கு ரசாயனம் தடவிய பணத்துடன் சென்றார்.
அலுவலகத்தில் அவரது அறையில் இருந்த அதிகாரி பாலுவிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட போது, அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக அதிகாரி பாலுவை பிடித்து கைது செய்தனர்.
மின்வாரிய அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X