என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம்-மதுரையில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலி
Byமாலை மலர்20 Oct 2017 5:28 AM GMT (Updated: 20 Oct 2017 5:28 AM GMT)
ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே உள்ள காரைக்குடியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது21).
இவர் காரைக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம். படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா காய்ச்சலால் அவதிப்பட்டார். உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நடைபெற்ற ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.
எனவே மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் கோமதியாபுரத்தைச் சேர்ந்தவர் காசிவிசுவநாதன் (48). சவரத்தொழிலாளியான இவருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காசிவிசுவநாதன் பரிதாபமாக இறந்தார்.
மதுரையை அடுத்த சமயநல்லூர் தோடனேரியைச் சேர்ந்தவர் ஆர்த்திகா (26). டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆர்த்திகா பரிதாபமாக இறந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே உள்ள காரைக்குடியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது21).
இவர் காரைக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம். படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா காய்ச்சலால் அவதிப்பட்டார். உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நடைபெற்ற ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.
எனவே மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் கோமதியாபுரத்தைச் சேர்ந்தவர் காசிவிசுவநாதன் (48). சவரத்தொழிலாளியான இவருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காசிவிசுவநாதன் பரிதாபமாக இறந்தார்.
மதுரையை அடுத்த சமயநல்லூர் தோடனேரியைச் சேர்ந்தவர் ஆர்த்திகா (26). டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆர்த்திகா பரிதாபமாக இறந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X