search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அரசு போக்குவரத்து கழக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - 8 பேர் பலி
    X

    நாகை அரசு போக்குவரத்து கழக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - 8 பேர் பலி

    நாகை மாவட்டம் பொறையார் அரசு போக்குவரத்து கழக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
    நாகை:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொறையாரில் அரசு போக்குவரத்து கழக கட்டிடம் உள்ளது. இன்று அதிகாலை அந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



    அப்போது, 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொறையார் செல்கிறார். மேலும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளும் பொறையார் செல்ல உள்ளனர்.

    Next Story
    ×