search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் தூர் வாரிய குளம் மழையால் நிரம்பியது
    X

    ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் தூர் வாரிய குளம் மழையால் நிரம்பியது

    ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் தூர் வாரிய குளம் மழையால் நிரம்பியதால் அந்த பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ஈரோடு:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸடாலின் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று குளங்கள் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    அவரே கட்சி தொண்டர்களுடன் குளங்களில் இறங்கி மண் வெட்டியால் வெட்டி தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதே போல் ஈரோடு பொத்தியாகாட்டில் உள்ள குளம் தூர் வாரும் பணி நடந்தது. ஈரோடு வந்திருந்த ஸ்டாலின் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்ததோடு மீண்டும் ஒரு தடவை ஈரோடு வந்து இந்த குளத்தை பார்வையிட்டார்.

    9 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பொத்தியா காடு குளம் சமீபத்தில் பெய்த மழை நீரால் நிரம்பியது.

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமையில் தி.மு.க. தொண்டர்கள் இந்த குளத்தை வெட்டி முட்புதர்களை அகற்றி தூர் வாரி இருந்தனர்.

    பொத்தியா காடு குளம் நிரம்பியதையொட்டி அந்த பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×