search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடியில் ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் வெட்டிக் கொலை
    X

    போடியில் ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் வெட்டிக் கொலை

    போடியில் ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
    போடி:

    நெல்லை அருகே மானூரைச் சேர்ந்த தமிபித்துரை மகன் தங்கமுத்து (வயது 19). ராஜேஷ் மகன் ஜான் பீட்டர் (18). இவர்கள் 2 பேரும் தேனி மாவட்டம் போடி அருகே எல்லப்பட்டியில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்தனர்.

    இந்த பகுதி தமிழகம் - கேரளாவை இணைக்கும் போடி மெட்டு பகுதியாகும். எனவே இங்கு பஸ் வசதி இல்லாததால் ஆட்டோ மற்றும் டிரக்கர்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சென்று வருவது வழக்கம்.

    அதன்படி கேரள பகுதிக்கு செல்லும் தோட்டத தொழிலாளர்களை ஆட்டோ டிரைவர்களான தங்கமுத்து, ஜான் பீட்டர் ஆகியோர் இறக்கி விட்டு வந்தனர். இன்று அதிகாலை 2 பேரும் எல்லப்பட்டியில் ஆட்டோக்களை நிறுத்தி இருந்தனர்.

    அபபோது மர்ம கும்பல் அங்கு வந்தது. அவர்கள் அரிவாள், கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தங்கமுத்து, ஜான் பீட்டர் ஆகியோரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

    இதில் 2 பேரும் சம்பவ இடத்தில் இறந்தனர். அதிகாலை 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்ததால் அந்த பகுதியில் இவர்களது அலறல் சத்தம் யாருக்கும் கேட்க வில்லை. இன்று காலை அந்த வழியே சென்ற பொதுமக்கள் ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த தகவல் ஊருக்குள் காட்டுத் தீ போல பரவியது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. தகவல் அறிந்த மேல சொக்கநாதபுரம் கராம நிர்வாக அலுவலர் சிவராஜ் இது குறித்து போடி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பிணமாக கிடந்த 2 பேரின் உடல்களை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் ஆட்டோ டிரைவர்களை கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து டி.எஸ்.பி. பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.

    இது குறித்து அக்கம் பக்கம் விசாரணை நடத்தியதில் இந்த கொலை பெண் தகராறில் நடந்து இருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    எனவே ஆட்டோ டிரைவர்களுடன் தொடர்பில் இருந்த பெண்கள் யார்? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×