search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பரிதாப பலி
    X

    மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பரிதாப பலி

    மதுரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் இன்று பரிதாபமாக இறந்தார்.

    மதுரை:

    மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் நூர்ஜகான் (வயது 53). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    பரிசோதனையின்போது அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நூர்ஜகான் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நூர்ஜகான் இன்று பரிதாபமாக இறந்தார்.

    மதுரை மாவட்டத்தில் டெங்குவுக்கு அடுத்தடுத்து பலர் பலியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×