என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் தி.மு.க.வினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Byமாலை மலர்13 Oct 2017 9:42 AM GMT (Updated: 13 Oct 2017 9:42 AM GMT)
கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு பணிகளில் பொதுமக்களுக்கு உதவியாக தி.மு.க.வினர் தொடர்ந்து தீவிரமாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து திருச்சியில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.
திருச்சி:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார். திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு எம்.எல்.ஏக்கள் மகேஷ் பொய்யா மொழி, ஸ்டாலின் குமார், முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் தி.மு.க.வினர் சந்தித்து பேசினர்.
திருச்சியில் இரண்டு துக்க நிகழ்ச்சிகள் தொடர்பாக அவர்களது உறவினர்களிடம் விசாரித்த மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மீண்டும் சங்கம் ஹோட்டல் சென்ற அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவது தொடர்பான அறிவிப்பு குறித்தும், அது தொடர்பான விசயங்கள் குறித்தும் முக்கிய நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு ஆலோசனை நடத்தினார்.
மேலும் டெங்கு கொசு ஒழிப்பு, காய்ச்சல் தடுப்பு, விழிப்புணர்வு பணிகளில் பொதுமக்களுக்கு உதவியாக தி.மு.க.வினர் தொடர்ந்து தீவிரமாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்பை விட உடல் நலம் தேறி வரும் தகவலையும் தெரிவித்தார்.
அதன் பிறகு மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார். திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு எம்.எல்.ஏக்கள் மகேஷ் பொய்யா மொழி, ஸ்டாலின் குமார், முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் தி.மு.க.வினர் சந்தித்து பேசினர்.
திருச்சியில் இரண்டு துக்க நிகழ்ச்சிகள் தொடர்பாக அவர்களது உறவினர்களிடம் விசாரித்த மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மீண்டும் சங்கம் ஹோட்டல் சென்ற அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவது தொடர்பான அறிவிப்பு குறித்தும், அது தொடர்பான விசயங்கள் குறித்தும் முக்கிய நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு ஆலோசனை நடத்தினார்.
மேலும் டெங்கு கொசு ஒழிப்பு, காய்ச்சல் தடுப்பு, விழிப்புணர்வு பணிகளில் பொதுமக்களுக்கு உதவியாக தி.மு.க.வினர் தொடர்ந்து தீவிரமாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்பை விட உடல் நலம் தேறி வரும் தகவலையும் தெரிவித்தார்.
அதன் பிறகு மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X